சாதா நாவல்கள் படித்து கொண்டிருந்த என்னை சரித்திர நாவல்களுக்கும், குண்டு சட்டியில் குதிரை ஒட்டி கொண்டு இருந்த என்னை ஆங்கில நாவல்களுக்கும் அறிமுகப்படுத்திய என் நண்பர்கள்,என் தொல்லைகளை துவளாமல் தாங்கும் தோழர்கள், தோழிகள்.
blog தோன்றா முன் காலத்தே ,கற்றதும் பெற்றதும் எழுதிய சுஜாதா, ferrari,dubukku,jollupandi
last but latest,நம்ம ஆள் பெரிய ஆள் ஆக வேண்டும் என்ற அவாவில்,"வெட்டியாக இல்லாமல்,உருப்படியாக ஏதாவது செய்" என அறிவுரை பகரும் பிரியமான தோழி, இரகசிய சினேகிதி(யாரும் அவளிடம் சொல்ல வேண்டாம் blog எழுதுவது மகா வெட்டி வேலை என்று!!)
ஆமாம், எதற்காக இவர்களை பற்றி சொல்கிறேன்? என்ற கேள்வி உங்கள் மனதில் இன்னும் எழ வில்லை என்றால், தட்டி எழுப்புங்கள் ஐயா!!
"குற்றம் புரிந்தவனை விட குற்றம் புரிய தூண்டியவர்களுக்கு தான் தண்டனை அதிகம்" என்று சட்டம் சொல்கிறது.ஆகையால்,"இவன் எல்லாம் blog எழுதுல,அப்படினு யார் அழுதா?" என்று நீங்கள் பாராட்டும் பாராட்டுகள் அனைத்தும் இவர்களை சாரும் என்பதை தாழ்மையுடன் தெரிவித்து கொள்ள விரும்பிகிறேன்.
.