Showing posts with label சினிமாதாட்ஸ். Show all posts
Showing posts with label சினிமாதாட்ஸ். Show all posts

Tuesday, May 25, 2010

தசாவதாரம்-சிறு குறிப்பு

 தசாவதாரத்தை பெருந்திரையில் தான் பார்க்க வேண்டும் என்று முடிவு செய்து படத்தை எடுக்கும் முன்னர் கடைசி நாள் கடைசி காட்சியை, படத்தை முன்னரே பார்த்தவர்களை இழுத்துச் சென்று  பார்த்த பொழுது அப்பாடா எடுத்த முடிவின் படி  பார்த்தாகி விட்டது என்ற எண்ணத்தை தவிர வேறு எதுவும் மேலோங்கி நிற்கவில்லை.

குளிர்பதன பேருந்தில் தெளிவான தியேட்டர் பிரிண்டில் பாஸ்ட் பார்வர்ட் ஏதும் இன்றி பார்த்த பொழுது சில பல பூதாகர சிந்தனைகள்.

அசின் என்ற ஒரு நல்ல நடிகையை காவல்காரன் மூலம் மீண்டும் தமிழுக்கு கொண்டு வரும் எங்கள் தலைவர் விஜய் வாழ்க!

பின்னணி இசை ஆகட்டும் பாடல்கள் ஆகட்டும் எல்லாம் பிரமாதம் எனத் தோன்றியது.

இப்படி படத்தில் இருக்கும் மற்ற(மல்லிகா ஷெராவத்)  சமாச்சாரங்கள் எதுவும் கண்ணுக்குத் தெரியாமல் மனதில் நிற்காமல் அனைத்தையும் சுனாமி போல் விழுங்குவது கமல்!

கமல் ஒரு ரகசிய வைணவ ஆத்திகரோ என்ற சந்தேகப் பேய் மனதில் தலை விரித்து ஆடிக் கொண்டிருக்கிறது.

அவருக்கு இந்த படத்திற்கு சிறந்த நகைச்சுவைக்கு என விருது வழங்கியது மிகப் பொருத்தம்.

கமலின் நடிப்புக்கு நிகர் அவரே[ அமெரிக்க காட்பாதர் பார்த்து விட்டு பழைய நாயகன் பார்க்கும் போது, பழைய படங்களில் ரஜினியின் நடிப்பை பார்க்கும் போது என சில சமயங்களில் கமலுக்கு  வழங்கப்படும் பாராட்டு அதிகமோ எனத் தோன்றியது உண்டு]

கமல் ஒரு சிறந்த வசனகர்த்தா. ஒவ்வொரு வார்த்தையையும் பார்த்து பார்த்து செதுக்கி இருக்கிறார். பின்னி இருக்கிறார். நக்கல் நையாண்டி எல்லாம் துள்ளி விளையாடுகின்றன.புத்திசாலித்தனம் மிளிர்கிறது. உதாரணத்திற்கு எதை விட எதை சொல்ல என்று யோசித்தால் படத்தின் வசனங்கள் அனைத்தையும் தான்  சொல்லவேண்டும்.

 தவறுகள் துருத்திக் கொண்டு தெரியாத திரைக்கதையும் கூட!

இவ்வாறு கொடுத்த காசுக்கு மேலாக பல சிறப்பம்சங்கள்    கூவுகின்றன.

ஜெயப்ரதாவை ஆட வைத்து நம்மை எல்லாம் கொடுமை படுத்தியதை கூட பொறுத்துக் கொள்ளலாம். [ஹேமமாலினி ஆடி இருந்தால் ஒரு வேலை கொண்டாடி இருக்கலாம்] ஆனால் தேவை இல்லாவிட்டாலும் திரைக்கதையை டிங்கரிங் பார்த்து பத்து வேடங்களில் நடித்து என் நடிப்புத் திறமையை நிரூபிப்பேன்,
 "கேயாஸ் தியரியை பாமரனுக்கு விளக்கி என் புத்திசாலிதனத்தை காட்டுவேன்  என கங்கணம் கட்டி இறங்கி, மேலும் சிறப்பாக விறுவிறுப்பாக இருந்திருக்க வேண்டிய  படத்தைத்  தராமல் இரசிகனை முட்டாளாக்கியதை பொறுத்துக் கொள்ள முடியவில்லை!

Monday, May 24, 2010

தமிழ் திரைப்பட பாடல்கள் எழுதுவது எப்படி?

 மிகப்  பிரபலமான  தமிழ் திரைப்பட பாடல்கள் எழுத வேண்டும் என்பது  என் ரகசியக் கனவு லட்சியங்களில் ஒன்று. அதுவும் குறிப்பாக காதல் பாடல்கள்!
தினசரிகளில் கட்டுரை எழுதிய காலங்களில் கவிதை எழுதுவது குதிரைக் கொம்பு, மிகுந்த கற்பனா சக்தி வேண்டும், நேரடி அனுபவம் வேண்டும் என்றெல்லாம் பலவாறாக எண்ணியது உண்டு. என்னால் எழுதவே முடியாது என்றெல்லாம் கூட பயந்தது உண்டு.  முதன் முதலாக கிறுக்கிய  போது[அது ஒரு ஒப்பாரியாக இருந்தா போதிலும்] அடைந்த ஆனந்தத்துக்கு எல்லையே இல்லை.

வேற்று மொழிக்காரர்கள் தமிழில் பாடுவது என்பது அவ்வளவு கஷ்டமான காரியம் இல்லை. தமிழ் பாடல்களில் ஒரு சில[ஆயிரம்] குறிப்பிட்ட   வார்த்தைகள் தான் மறுபடி மறுபடி வரும் என்னும் பொருள் படுமாறு ஹரிஹரன் ஒரு பேட்டியில் சொன்னதை படித்ததாக நினைவு! அப்படி என்றால் எழுதுவதற்கும் ஒரு சில வார்த்தைகள் தெரிந்து இருந்தால் போதுமல்லவா? [இல்லை பாடல் எழுத சில குறிப்பிட்ட ஆயிரம் வார்த்தைகள் தெரிந்து இருந்தால் போதும் என்று வேறு எங்கேயாவது படித்தேனா என்று குழப்பமாய் உள்ளது].

சொந்த கருத்தோ சுட்ட கருத்தோ  சற்று யோசித்து பார்த்தால் இது உண்மை என்று தான் தோன்றியது! சங்க கால குறுந்தொகை பாடல்களின் கருப் பொருளும் உவமைகளும் இன்றைய நிலைமைக்கும்
பொருத்தமாய் உள்ளது.  அதற்காக பாடல்கள் எழுத இதை எல்லாம் கஷ்டப்பட்டோ இஷ்டப்பட்டோ படிக்க வேண்டிய அவசியமில்லை.

ஏதேனும்  டேட்டா பேசில் ஆயிரம் தமிழ் பாடல்களின் வரிகளை ஏற்றவும். எந்த வார்த்தைகள் எல்லாம் அதிகம் பயன் படுத்த படுகின்றன, அந்த வார்த்தைகளை எல்லாம் வேறு வார்த்தைகள் மூலமாக சொல்ல முடியுமா, எந்த சந்தர்பத்தில் எவ்வாறு பயன் படுத்த படுகின்றன என்று எல்லாம் பார்த்து வைத்து கொள்ளவும்.  இதை ஒருவாறு செம்மை படுத்தினால் நீங்களும் அடுத்த கவி குறு நில மன்னர் நீங்கள் தான்!

நம்ப முடிய வில்லையா?

"உடையென எடுத்து எனை உடுத்து" இது பல வருடங்களுக்கு முன்னர் காதலர் தினம் என்னும் படத்தில் ரோஜா ரோஜா எனத் தொடங்கும் பாடலில் வாலி எழுதிய வரிகள்

"உடை களைவீரோ உடல் அணிவீரோ" இது இப்பொழுது ராவணனில் கள்வரே எனத் தொடங்கும் பாடலில் வைரமுத்து எழுதியது.

"ஒழுக்கங்கள் என்பது ஊர்களை பொருத்தது"இது தசாவதாரம்  படத்தில் கா கருப்பான எனத்  தொடங்கும் பாடலில் வாலி எழுதிய வரிகள். [இவரே தான் இதே படத்தில் கல்லை கண்டால் கடவுள் இல்லை என்ற பாடலையும் எழுதியவர் என்பதையும்  நினைவில் கொள்ள வேண்டும்]


"ஒழுக்கம் ஊருக்கு ஊர் மாறிக் கிடக்கு" இது வசூல் ராஜா படத்தில் சீனா தானா எனத் தொடங்கும் பாடலில் வைரமுத்து எழுதியது.

ஆராய்ச்சியில் இறங்கினால் இது போல் பல உதாரணங்கள் கிடைக்கும் என்பதில் சந்தேகம் வேண்டாம்!

எனக்கு ஏன் இந்த வீபரித ஆசை என்றெல்லாம் கேள்வி கேட்பவர்களுக்கு, இப்பொழுது கவிஞர்கள் எல்லாம் நடிகர்கள் ஆகி விடுகிறார்கள். நடிகன் ஆனால் முதல்வர் ஆக வாய்ப்பு இருக்கிறது அல்லவா. 
அட முதல்வர் பதவி இல்லை என்றாலும் மேலவை உறுப்பினர் பதவி கூடவா
  கிடைக்காமல் போய் விடும். அதுவும் இல்லாவிட்டால் இது போன்ற என் ஆராய்ச்சியை பார்த்து புல்லரித்துப் போய் எந்த பாடாவதி பல்கலைகழகமாவது எனக்கு முனைவர் பட்டம் கொடுக்காமலா போய் விடும்?

Monday, April 26, 2010

Inglourious_Basterds

The entire family is killed by a villain. As it goes in movies, (un)fortunately one alone survives to live(or die) another day. The grown up survivor falls in love with the person who is associated with the villain gang that killed the entire family. As luck would have it, there are some other interested parties who would love to kill the villain gang and they end up helping the hero even with out their knowledge.The revenge rules over the love. The person plots to kill the villain gang and succeeds. The shrewd villain gets what he deserves!
Sounds like a typical kollywod/bollywood story, huh! The treatment of the story with few twists and turns here and there in a second world war setting, throw in famous characters like Hitler, Goebbels,a Jew Hunter and a Nazi Hunter, strong screenplay, a vivid portrayal of characters and a solid performance by actors along with that Tarantino touch makes it an awesome believable movie.

I think the reason it did not win manys Oscars because the jury thought it was competing in Best Foreign Language Film!

P.S
I loved this movie and I am a very big fan of Quentin Tarantino, Hence no thrashing .
For an unbiased view and to know more.
This movie is definitely not meant for kids and grown up kids who dont have stomach for gruesomeness.

Saturday, March 27, 2010

The Devil Wears Prada

Not sure why i wanted to watch this movie!

Is it because he was drooling over anne hathway[:P :D] or or just to kill the boredom of my insomniac nights!

Well, First things first. Anne did not appeal to me! More over i liked the smart, Fat Anne who wears hideous skirts than the one who comes in the later part.

Loved the part where Meryl gives a history lecture on the sweater Anne wears! [if you had read the above line, you will know why i loved these :)]

Of all the characters in the movie, the one which admired the most was Meryl Streep.[What a lady sir she is ;)]

As soon as you see a guy doing favors and flirting with the heroine, when she has a steady boy friend, you can guess they will end up in bed!

This movie also reinforced my thoughts, why i really prefer watching english movies. They really do think a lot or spend efforts on a thing called "SCREEN PLAY" and give their best shot to make the story more realistic and give a try to tie the loose ends. Above all the climax, usually has a twist, a poetical touch if i may say and keeps you hooked until the last second.

Deepdown if i think, why i really liked the movie is cause, it is the story of most of our lives.

You get in to a job knowing least about it.  Keep thinking that it is a pit stop and temporary thing that will be a ticket to pursue your passions. Keep cribbing about the job and everything. You get englightened during a tea break from your senior colleague that ,If you cant work in what you love, Love the work you do" "Prove that you are good at what you are doing before you ask, this is what i want to do"  You start drinking the Kool Aid,  start worshipping the holycows,you blasphemed; you join the bandwagon and become one among them or even worst among them. All this happens while you forget you (did) are doing all this because, you were not able to beat them and can never accept the reality "they got you too" and you did sell your soul to devil.

And in the end, you think, "I had no choice and I am doing what everybody wanted to do!"

We just lack the courage and conviction to walk away from the hell we rot!

Friday, November 13, 2009

The Ugly Truth

This Movie is R-Rated. So is this review post!

வேலையில் கண்ணும் கருத்துமாய் தொழிலைத் தெய்வமாய் மதிக்கும் பெண், ஆனால் ஒண்டிக்கட்டை. ஆண்கள் மீது ஆசைதான், ஆனாலும் இப்படி இருக்க வேண்டும் அப்படி இருக்க வேண்டும் என மாத மளிகைக் கடைப் பட்டியலை விட நீளம், எவன் சிக்குவான்? அப்படியே சிக்கினாலும் அவனிடம் சிறுபிள்ளைத்தனமாய் நடந்துக் கொண்டால்.

இப்படி இருக்கையில், அவள் அலுவலகத்திற்கு அவளிடம் ஒருவன் வேலைக்கு சேர்கிறான். அவனை அவளுக்கு சிறிதும் பிடிக்கவில்லை. அவனும் அவன் பேச்சும் நடவடிக்கைகளும் எரிச்சலூட்டுகின்றன. வேலையில் ஒரே வெட்டுக்குத்து.

இந்த நேரத்தில் அவள் வீட்டுக்கு பக்கத்தில் ஒரு அழகான தேவன்.[தேவதைகள் மட்டும் தான் இருக்க வேண்டுமா என்ன].

இதையெல்லாம் தெரிந்த நம் கதாநாயகன், கதாநாயகியின் காதலுக்கு உதவி செய்தால் வேலையில் வெட்டுக்குத்து இருக்க கூடாது என ஓப்பந்தம் போடுகிறான்[குழப்பமாய் இருக்கிறது என சொன்னாலும் சரி புரிந்து விட்டது என சொன்னாலும் இத்தோடு இதை படிப்பதை நிறுத்தி விடலாம்.]

கதாநாயகன் திட்டப்படி நடக்க கதாநாயகிக்கு பக்கத்து வீடு உஷாராகிறது. இந்த நேரத்தில் கதாநாயகனோடு கதாநாயகி வெளியூர் போக, போன இடத்தில், கற்பனையைக் கட்டுப்படுத்திக் கொள்ளுங்கள். காதல் வருகிறது. நம் பக்கத்து வீடும் வந்து சேருகிறது.

பக்கத்து வீ ட்டை, பக்கம் வராதே என கதாநாயகி விரட்டிவிட, அது தெரியாமல் கதாநாயகன் வேலையை விட்டு விலகி விட, பின்னர் கடைசியில் இருவரும் இணைகிறார்கள்.[கதாநாயகியும் கதாநாயகனும் தான்]

என்னடா இவன் தமிழ் படக் கதையை தன் சொந்தக் கதை என்று கரடி விட போகிறானா என்று கடுப்படைய வேண்டாம்.

The Ugly Truth என சமீபத்தில் வந்த ஆங்கிலப் படத்தின் கதை இது தான்.இனி திரைக்கதை.

கதாநாயகி தொலைக்காட்சியில் வணக்கம் சென்னைப் போன்ற ஒரு நிகழ்ச்சியின் தயாரிப்பாளர். எதையும் பிளான் பண்ணித்தான் செய்வார். ஆண்களைக் கணக்கு பண்ணுவதிலும், ஆனாலும் பிளான் பணாலாகி விடும்.

அப்படி இருக்க நிகழ்ச்சி பரபரப்பாக அதிரி புதிரியாக இருக்க வேண்டுமென நாராயண ரெட்டி ரேஞ்சுக்கு ஒருவனை கதாநாயகியின் மேலாளர் கொண்டு வருகிறார்.நிகழ்ச்சியின் டிர்பி ரேட்டிங் எகிறுகிறது. அவனால் இவள் வேலைத் தப்புகிறது.இவள் காதலுக்கும் கைக் கொடுக்கிறான். காதலனோடு வெளியூர் போகவிருக்கையில், இவர்களை விட ஒரு பெரிய தொலைக்காட்சி அவனைப் பேட்டிக்கு அழைத்து , அதன் மூலம் அவனைக் கொத்திக் கொண்டு போக இருப்பதாக செய்தி வர, நீ தான் அவன் கூட இருந்து பேசி அவனை தடுக்க வேண்டும். இல்லையெனில் நம் கதி அதோகதி என நிகழ்ச்சிக்கு கதாநாயகியை துணைக்கு அனுப்பி வைக்கிறார், மேலாளர்.

போன இடத்தில் கதாநாயகிக்கு பெரிய வேலையில்லாமல் பெரிய தொலைக்காட்சியின் அழைப்பை சொந்த காரணங்களுக்காக நம் ஆள் நிராகரித்து விட, சந்தோஷத்தில் கதாநாயகி இருக்கையில் இருவருக்கும் காதல்

தீ பற்றுகிறது. அணைத்து அணைக்க முயற்சி செய்து பிரிகின்றனர். சென்ற பின் கதாநாயகியின் கதவு தட்டப்படுகிறது, திறந்தால் காதலன், சிறுது நேரம் கழித்து மீண்டும் கதவுத் தட்டப்பட கதாநாயகன். எல்லாரும் அப்படியே ஷாக்கிறார்கள், நம்மைத்தவிர. கதாநாயகன் கிளம்பிச் செல்ல, கதாநாயகி காதலனிடம் உண்மையைச் சொல்லி பிரிகிறாள்.

ஆனால் அடுத்த நாள் வேலைக்கு போனால் நம் ஆள் இராஜினாமா செய்திருப்பான். பின்பு அவர்கள் எப்படி இணைகிறார்கள் என்பதை ஜவ்வில்லாமல் மிக அழகாக எடுத்திருப்பதாக எனக்குப் பட்டது.

படத்தில் கதாநாயகனைச் சந்திக்க வரும் சிறுவன் யாரென கதாநாயகி ஒரு நொடி தயங்குவதும் நான் அவன் மாமன் என விளக்குவதும் அவன் பொருட்டு தான் நான் பெரிய தொலைக்காட்சியில் வெளியூரில் வேலை செய்ய விருப்பமில்லை எனச் சொல்வது, கிளைமாகஸ் என சில நெகிழ்வான காட்சிகள் சில உண்டு.

புதிரா புனிதமா அளவுக்கு நிகழ்ச்சி நடத்தும் கதாநாயகனுக்கு கதாநாயகி, போன் செய்து பேசும் காட்சி, கதாநாயகி காதலனை முதலில்[முழுதாகப்] பார்ப்பது, கதாநாயகி காதலனோடு மேட்ச் பார்க்கப் போவது, கதாநாயகி பார்ட்டிக்கு போவது, என ஒரு சில ஆங்கில தரத்தில் இருக்கும் சில காட்சிகளை தமிழ் கலாச்சாரத்திற்கு மாற்றி சூர்யாவோ மாதவனோ தமன்னாவோ வந்தால் ஆச்சரியப்படாதீர்கள்

பி.கு
அது என்ன ugly truth என கேட்பவர்களுக்கு அது தான் நம் கதாநாயகன் நடத்தும் நிகழ்ச்சியின் பெயர்.

Sunday, November 08, 2009

என் சுவாசக் காற்றே!

அரவிந்த்சாமி பார்ப்பதற்கு மட்டும் டாம் க்ரூஸ் அளவுக்கு இல்லாமல், அந்த ஆரம்ப ஸ்டண்ட் காட்சியையும் அவரைப் போலவே சிறப்பாகத்தான்
செய்துள்ளார்.ஆனால் அடுத்த நொடியே மொக்கையான தமிழ்சினிமா தான் பார்த்துக் கொண்டிருக்கிறோம் என்பதை நினைவூட்டுகிறார்கள். அதை
கிளைமாக்ஸ் வரை விடாமல் சிறப்பாக மெயின்டெயின் செய்கிறார்கள்.கொலையில் இணையும் காதல் நம்மை கொன்றுவிடுகிறது.

இருந்தாலும் அந்த காதல் காட்சிகள் எல்லாம் கவிதை கவிதை.

கதை முடிச்சு எல்லாம் நன்றாக போடத்தான் முயற்சி செய்திருக்கிறார்கள்.ஆனால் நடுவே பிரகாஷ்ராஜ் காணாமல் போவது, தேவையில்லாத ஓட்டாத காமெடி பிட், என அவிழ்ப்பதில் திரைக்கதை சிக்கி சின்னாபின்னமாகி விட்டது.

ரகுமான் இசை, வைரமுத்து வாலி வரிகள் அருமையான ஒளிப்பதிவு, இனிமையான இஷா எல்லாம் வீணா போச்சே[என் தூக்கம் உட்பட]

பி.கு
1.படத்தில் வரும் அரவிந்த்சாமி வீடு போல வாங்கவோ கட்டவோ முடியவில்லையென்றாலும் வாடகைக்காவது நான்கு மாசம் இருக்க வேண்டும்.

2.மழையில் BigFlix-ல் சென்று வாங்கி வந்த இந்த டிவிடியை எங்கு வைத்தேன் எனத் தெரியாமல், Hot Chips-க்கும் வீட்டிற்கும் அலைந்து போதே சகுனம் சரியில்லை என்று உஷாராகியிருக்க வேண்டும். விதி யாரை விட்டது.அதுமட்டுமல்லாமல், லேசாக ஜுரம் வந்தது போல ஒரு பீலிங். ஆமாம் இஷாவை இவ்வளவு நனைய விட்டிருக்கிறார்களே, பாவம் அவங்களுக்கும் ஜுரம் வந்திருக்குமோ?

இப்படிக்கு(இப்போதைக்கு) இஷா பீவரில்
zeno

Saturday, November 07, 2009

Malaikallan Pol Oruvan

People say things change, I am a firm believer though things change, certain fundamentals never ever change.

If you don't believe check this video!
To know about the first half of the clip, check here
To know about the second half of the clip, check here
If you want to know is it mere coincidence? then ask him!
if you want to know how i created the clip, check here.

p.s
thanks to my tech guru, who provides me with all these kind of tools
Bear with me if at all there are any sync problems

தமிழ் பாடல் காட்சிகளின் ஆபாசத்தின் ஆரம்பகர்த்தா!

ஒன்று எனக்கு கண்களில் எதேனும் கோளாறு இருக்க வேண்டும், அல்லது கலாசாரத்தைப் பற்றிய என் அளவுகோல் மிகவும் பரந்து விரிந்ததாக இருக்க வேண்டும்.ஸ்ரேயாவின் உடைகள், கந்தசாமியில் அவ்வளவு மோசமாகப் படவில்லை.
 இல்லை மோசம் தான் என கூறுபவர்கள், எம். ஜி.ர் ஆடிப்பாடும், அழகிய தமிழ் மகள்[ யாரது என்று எனக்கு தெரியவில்லை]தமிழ் சினிமாவில் அதீத கவர்ச்சி ஏன் ஆபாசத்தை அறிமுகப் படுத்தியவர் எம். ஜி.ர் தான் எனக் கேள்விப்பட்டதுண்டு. இந்தப் பாடலைப் பார்த்தவுடன் அது சரி தான் எனத் தோன்றியது.[Youtube-ல் Link கிடைக்கவில்லை, இதைப் படித்தவுடன் ஒருவர் எடுத்து தருவார் என்ற நம்பிக்கை இருக்கிறது].
மேலும் அந்த காலத்திலேயே அப்படி என்றால், இந்த காலத்தில் அதை விட பல மடங்கு முன்னேற்றம் வேண்டாமா? அதோடு ஒப்பிடுகையில் கந்தசாமி ஒன்றுமேயில்லை என்பது என் அபிப்ராயம்.

Update:Finally found the Youtube link for the song. Not exactly finally, cause never did the due diligence to find the song! Also one more thought occured.  I don't think the actress of yesteryears were paid awesome money as of today's actress. The glam quotient or the vulgarity of today's is nothing when compared to songs like this! Shame on you  today's glam queens you dont do the justice to your salary and you producers/directors you dont extract what your money is worth :P

Update:
After a long time, i was able to find the youtube link for the above mentioned song. It is from the movie "Rickshawkaran" and MGR was awarded national award for this movie.
Not much is 'visible' in this print. If only you get a better print don't watch it with the family!