Saturday, June 02, 2012

கன்னம் கன்றிய கவிதைகள்

கவிதைகளின் கதையும் காரணமும்!

ட்வீட்டரில் சொக்கரின் இந்த ட்வீட்டை பார்த்தவுடன் பசங்களுக்கு கவிதை கிறுக்க நான் அவனில்லையே என்று தான் தோன்றியது! பிறகு புரிந்தது இதைப் பார்த்தவுடன்

பி.கு
இனியாவது சத்தியமாக நம்புங்கள்! இங்கு நான்  இரகசிய சினேகிதிக்காக கிறுக்கியதும் சரி இரகசியமில்லா சினேகிதிகளுக்காக கிறுக்கியதும் சரி கற்பனை கற்பனையே

ட்வீட்-1
ரோட்டில் ஒரு ஜோடி, சிரித்தபடிதான் நடந்துகொண்டிருந்தார்கள், திடீரென்று அவள் அவன் கன்னத்தில் ஓர் அறை, பார்த்தவர்கள் வெலவெலத்துப்போனோம் :>

ட்வீட்-2
நடு ரோட்டில் கன்னத்தைத் தடவிக்கொண்டு அந்தப் பையன் பரிதாபமாக நின்ற காட்சியை வைத்து @zenofzeno ஏதாவது கவிதை எழுதிவிடுவார் :>
கன்னம்
கன்றியதற்கா
கவிதை
கேட்கிறார்கள்
கல்நெஞ்சமுமில்லா
கொடியவர்கள்!

கவலையில்லை
கலங்காதே
களிப்புடனே
கிறுக்குவோம்
கலக்குவோம்!
oOo

உன்
உதடுகளுக்கும்
விரல்களுக்கும்
வித்தியாசமில்லை

முத்தத்திற்கும்
மொத்திற்கும்
மட்டுமெதற்கு!
oOo

கையும்
கையும்
கலந்து
காலாற
காற்றையும்
கடலையையும்
கடக்கும்
காதலர்
கட்டியணைப்பதும்
கைநீள்வதும்

காலத்தின்
கோலமய்யா
கண்டுகொள்ளாதீர்!
oOo

கைகோர்த்தவள்
கன்னத்தை
கன்னாபின்னாமாக்குவதற்கு
கண்டவர்
கொள்ளிக்
கண் தான்
காரணம்
வேறில்லை
கண்டுக்கொள்!
oOo

விரலும்
விரலும்
உரசி
விளையாடிய
விநாடிகளில்
உணரவில்லை
உன்
விரல்களின்
வலிமையை

உணர்ந்தேன்
வலித்தபோது!
oOo

உனை
சிரிக்க
வைத்தேன்
நான்

எனை
சந்தி
சிரிக்க
வைத்தாய்
நீ!
oOo

2 comments:

நவீன் said...

"முத்தத்திற்கும்
மொத்திற்கும்
மட்டுமெதற்கு!"
//

அது 'மொத்தத்திற்கும்' தானே? :D

Venkat said...
This comment has been removed by the author.