Showing posts with label Review. Show all posts
Showing posts with label Review. Show all posts

Sunday, January 23, 2011

காவலன் குறிப்புகள்

ரொம்ப நாள் கழித்து விஜய் நடித்திருக்கிறார்.

அசின் கொஞ்சம் தாராளமாய் நடித்திருக்கிறார். அவர் ரேஞ்சுக்கு இது எல்லாம் தாராளம் தான்.

அசினுடன் வரும் பிகர் அசினை விட அம்சமாய் இருக்கிறார்! :P :D

வடிவேலுவின் காமெடி ரொம்ப லேட் பிக் அப்! சில இடங்களில் எவ்வளவு டிரை பண்ணியும் சிரிப்பு வரவே இல்லை! சில இடங்களில் சிக்ஸர் அடிக்கிறார்.

மற்றவர்களைப் பற்றி ஒன்றும் சொல்வதற்கில்லை!

விஜய் படத்தின் பாடல் காட்சிகளில் மக்கள் வெளியே போவது இது தான் முதல் முறை என நினைக்கிறேன்.[ஆரம்ப காலங்களில் கண்ணை மூடிக் கொள்ள வேண்டி இருந்தது எல்லாம் வேறு]

கதை நல்ல கதை. திரைக்கதை அங்கு அங்கு லைட்டாக சொதப்புகிறது. படத்தில் பாஸ்கரைப் போல அவ்வப் பொழுது எனக்கும் தூக்கம் வந்தது. ஆனால் கிளைமாக்ஸில் டக்கரான டிவிஸ்ட்.[சொதப்பல்களை எல்லாம் சொன்னால் சுவாரஸ்யம் போய் விடும்]

அனைத்தையும் விட என்னைப் போன்ற தீவிர விஜய் இரசிகர்களை ஏமாற்றி விட்டது :( இதற்காக விஜயை வன்மையாக கண்டிக்கிறேன்!

Monday, November 15, 2010

மகதீரா

தான் ஆடாவிட்டாலும் தன் சதை ஆடும் என்னும் சொல்லிற்கேற்ப தெரிந்தோ தெரியாமலோ தெலுந்கு படங்களின் மீது அதீத பைத்தியம். தமிழில் தெரியும் அபத்தங்கள் தெலுங்கில் கண்ணுக்குப் படுவதில்லை. பட்டாலும் கண்டு கொள்வதில்லை.

அப்படியிருந்தும் கூட ராம்சரண் தேஜா நடித்த சிறுத்தாவைப் பார்த்து சிதறிப் போயிருந்தேன். அதன் காரணமாக ஆஹா ஒஹோ என்று
ஊரெல்லாம் புகழ் பாடியிருந்தும் அந்த மூஞ்சியைப் பார்க்க வேண்டுமா என மகதீரா பார்ப்பதை தள்ளிப் போட்டுக் கொண்டு இருந்தேன்.

கதாநாயகியும் கதாநாயகனும் மலையுச்சியிலிருந்து செத்துப் போகும் ஆரம்ப காட்சியில் இருந்தே அதகளம் தான்.

தெலுங்கு சினிமாவிற்கு தெலுங்கில் பெயர் வைக்கிறார்களோ இல்லையோ தெலுங்கில் டைட்டில் வைக்கிறார்களோ இல்லையோ பிரம்மானந்தம் இருப்பார் இதிலும் இருக்கிறார். ஆனால் காமெடி தான் இல்லை. படத்திற்கு அதன் தேவையும் இருப்பதில்லை மீனா குமாரி புகழ் நடிகையின் குத்தாட்டமும் உண்டு. கிராபிக்ஸ் புண்ணியத்தில் சிரஞ்சிவியின் பழைய டான்ஸும் உண்டு. ராம் சரண் தேஜாவும் டான்ஸில் குறை வைப்பதில்லை. எந்த தெலுங்கு ஹீரோவும் டான்ஸில் குறை வைப்பதில்லை.

இரண்டு கதாநாயகிகளில் ஒரு கதாநாயகியின் கனவில் கதாநாயகன் மற்றொரு கதாநாயகியுடன் ஆட்டம் போடுமாறு காட்சியமைக்கும் தெலுங்கு சினிமாவில் குத்தாட்ட நடிகை கூட கதாநாயகியாக தோன்றும் புரட்சியான சமாச்சாரம் எல்லாம் உண்டு

காஜல் கண்ணுக்கு குளிர்ச்சியாக! ஹும்! அதுவும் காஜலின் துப்பட்டா தனி காரெக்டர். படத்தின் பல திருப்பங்களுக்கு துப்பட்டா தான் காரணம்!

ஆசைப் பட்டால் அடைய வேண்டும் இல்லையெல் அழித்து விட வேண்டும் என்னும் பவர் புல் வில்லன்.  இவரைப் போய் சுறாவில்  அவ்வளவு சின்னபுள்ளத் தனமாக காட்டிவிட்டார்களே என்ற வருத்தம் வராமலில்லை.

கெட்டவனும் நல்லவனும் ஒரு பெண்ணைக் காதலிக்க நல்லவன் பெண்ணை கைப்பிடிக்கும் காய்ந்து கருவாடான கதை என்று ஒதுக்கித் தள்ள முடியாத அளவு திரைக்கதையில் தூள் கிளப்பி இருக்கிறார்கள்.

அதுவும் ஒரே கதையை ஒரே படத்தில் இரு ஜென்மம் என சலிக்க வைக்காமல் இருமுறை காட்டுவதில் பின்னி பெடலெடுக்கிறார்கள்.அதுவும் ஒரு சில காட்சிகளை மூன்று முறை எல்லாம் காட்டியும் கடுப்பாக இருப்பதில்லை.

இருஜென்மங்களிலும் வில்லன் ஈட்டி எறிவதில் கில்லியாக இருப்பது, கதாநாயகியின் தந்தையைக் கொல்வது, என பல இடங்களில் இரு ஜென்மங்களுக்கும் தொடர்பு வைத்து திரைக்கதை அமைத்திருப்பதை பாராட்டியே ஆக வேண்டும்.

கிளைமாக்சில் ஹெலிகாப்டரை கார் மூலம் காலி செய்வதைப் பார்க்கும் போது டை ஹார்ட் 4 நினைவில் வந்து போகிறது.

ஆரம்பம் முதல் கிளைமாக்ஸ் வரை வந்தும் கதைப் பற்றி சொல்லவில்லையே எனக் கேட்பவர்களுக்காக
இந்த ஜென்மத்தில், ஒரு ஸ்பரிசத்தில் முன் ஜென்மவாசனையை முகர்ந்து முகம் கூட பார்க்காமல் காதலில் விழும் கதாநாயகன்.

முன் ஜென்ம வாசனை எதுவும் இல்லாமல் காதலில் விழும் கதாநாயகி.

 பழி வாங்க வந்த இடத்தில் காதலில் விழும் வில்லன்.
காதலில் விழுந்த கணமே தந்தையைக்  கூட காலி செய்யும் தன்னால் அவளை தீண்டக் கூட முடியாத காரணத்தை தேடிச் செல்லும் வில்லன் முன் ஜென்ம கதையை அறிந்துக் கொள்கிறார்.

வாசனையை மட்டுமே முகர்ந்த கதாநாயகன், முன் ஜென்மத்தில் உயரத்திலிருந்து விழுந்ததைப் போல இந்த ஜென்மத்திலும் விழும் போது எல்லாக் கதையையும் நினைவுக்கு வருகிறது.
முன் ஜென்மத்தில் ஷெர் கான்னாக இருந்து கதாநாயகனின் சாவுக்கும் காதலை பிரிப்பதற்கும் காரணமாக இருந்ததை நினைத்து வருந்துபவர் சாலமனாக இந்த ஜென்மத்தில் கதாநாயகனின் உயிரைக் காப்பாற்றி காதலை சேர்ப்பதற்கும் உதவுகிறார்.

இதனிடையே வில்லனின் வில்லத் தனத்தால் கதாநாயகனை வெறுக்கும் கதாநாயகிக்கு பூர்வ ஜென்ம ஞாபகத்தை வரவைக்க அதே இடத்திற்கு கதாநாயகியைத் தூக்கி சென்று முன் ஜென்மத்தில் வில்லனைக் கொன்ற அதே கத்தியைக் கொண்டு சண்டையைப் போடுகிறார். காதலிக்கும் முன் ஜென்ம வாசனை வந்து விடுகிறது.

முன் ஜென்மத்தில் கதாநாயகியைக் கொன்றதைப் போல இப்பொழுதும் கொல்ல வில்லன் நினைக்க , முன் ஜென்மத்தில் செய்த தவறை மனதில் வைத்து முன்னெச்சரிக்கையாக வில்லனைக் கொன்று காதலியைக் காக்கிறார் கதாநாயகன்.

இதைப் படித்தப் பின். “இப்பொழுது நான் இருப்பது முன் ஜென்மமா என்ன ஜென்மம்” என்ற சந்தேகம் வந்தால் படத்தைப் பார்த்து தெரிந்துக் கொள்ளவும். இப்படி குழப்பமான கதையை தெள்ளத் தெளிவாக எடுத்திருக்கிறார்கள்.

மகதீரா ஒரு மிஸ் செய்யக் கூடாத படம்!

Monday, June 21, 2010

நம்மைப் போல் ஒருவன்

அப்பா வீட்டில் வேலை பார்த்துக் கொண்டிருக்க பக்கத்தில் பெண் குழந்தை அம்மாவுக்கு நெக்லஸ்  செய்து கொண்டிருக்க கதவு தட்டப்படுகிறது. திறக்கும் அப்பாவின் மண்டை மீது உருட்டுகட்டையில் அடி. கைகள் கட்டப்பட்டு கத்தியால் குத்தப்பட்டு, அம்மாவுக்கும் அதே மரியாதை. இதனையும் அரங்கேறும் சமயம் கூட வந்தவன் வீட்டில் இருப்பதை எல்லாம் சுருட்டுகிறான். அப்பொழுது வந்து நிற்கிறது அந்த குழந்தை. குழந்தைகளுக்கு என்னை மிகப் பிடிக்கும் என்று சொல்லியவாறு அதை தூக்கிக் கொண்டு செல்ல அப்பா சுயநினைவிழக்க காட்சி வெட்டப்படுகிறது.[பின் வரும் வன்முறைக் காட்சிகள் எவ்வளவு கொடூரமாய் இருக்கும் என்பதற்கு இது ஒரு சாம்பிள்]

நோயாளி செத்தாலும் நான் செய்யும் ஆபரேஷன் சக்சஸ் என்னும் சொல்லும் டாக்டரைப் போல், என் கட்சிக்காரனுக்கு நீதி கிடைக்க விட்டாலும் நான் ஆஜரான வழக்கு ஜெயிக்க வேண்டும் என்ற லட்சியம் கொண்ட ஒரு அரசாங்க வக்கீல்.

கொலை செய்தவன், கூட திருடியவன் தான் கொலை செய்தான் என்று நான் சாட்சி சொல்லத் தயார் ஆனால் எனக்கு குறைந்த தண்டனை வாங்கித் தர வேண்டும் என டீல் போட அதை வக்கீல் ஒப்புக் கொள்கிறார். யாரையும் கொல்லாதவனுக்கு மரண தண்டனை விதிக்கப் படுகிறது.

கோபம் கொண்ட அப்பா பழி வாங்க சுபம் என முடியும் கதை தானே என்று எல்லாம் நினைக்க கூடாது.

சரியாக பத்து வருடங்கள் கழித்து, சொந்த மகளின் அரங்கேற்றத்துக்கு செல்லாமல், அதற்கு மனைவியிடம் திட்டு வாங்கி கொண்டே,மகளின்  மனம் நோகாமல் இருக்க அவள் செய்த ரொட்டி துண்டை கொறித்து விட்டு அவசர அவசரமாக கிளம்புகிறார்.  தான் தண்டனை வாங்கி கொடுத்தவனுக்கு விஷ ஊசி போட்டு கொல்லப்படுவதை பார்க்க. [முந்தைய பாராவில் சொல்லப்பட்ட வழக்கு தான் என்று எல்லாம் விலாவரியாக சொல்ல வேண்டும் என்று எல்லாம் எதிர் பார்க்க படாது]


கிளம்பும் போது உடன் வரும் பெண்மணியிடம் ஒருவர் தூங்க செல்வது போல் இருக்கும், அவ்வளவு தான் ஒரே வித்தியாசம் இவர் திரும்பி எழ மாட்டார் என்று சொல்லும் போது, அந்த கைதி அப்படி சாக மாட்டான் என்று ஊகித்தால் உங்களுக்குள் ஒரு சினிமாக்காரன் ஒளிந்திருக்கிறான் என அர்த்தம்.
 
 அவனை கொல்லப்படும் திரை திறக்கும் போது வக்கீலின் பெண் அரங்கேற்ற திரை திறப்பது என்று பொயடிக் டச்! [இப்படி பல டச்கள் உண்டு]
 
மரணத் தண்டனைக் கைதி  இப்படி தான் சாக வேண்டும் என்று சட்டம் சொல்கிற படி சாகாமால், ரத்தம் கக்கி கொடூர முறையில் சாவதால் கொலை விசாரணை தொடங்குகிறது. கொலை நடந்த இடத்தில் "உண்மையோடு போராட முடியாது" என்னும் பொருள் பட எழுதிய ஒரு பாட்டில் கிடைக்கிறது.

வழக்கு நடக்கும் போது ஆப்ருவர் ஆன குற்றவாளி இதையே தன்னிடம் சொன்னது வக்கீலுக்கு நினைவு வர அவனை சந்தேகித்து அவனை பிடிக்க கிளம்புகிறது.

அவனை தேடி போலீஸ் வந்து கொண்டிருப்பதை ஒருவன் போனில் சொல்கிறான்.  போலீஸ் காரில் தப்பித்து போக வழியும் சொல்கிறான், அப்படி அவன் வந்து சேருமிடம் அந்த பெண்ணின் அப்பா தான் என்று சரியாக சொன்னால் படிப்பதை நிறுத்தி விட்டு தாரளமாக கோடம்பாக்கம் கிளம்பலாம்.

தன் மனைவியையும் குழந்தையும் கொன்றவனை முகமூடி அணிந்து  மிக கொடூரமாக கொலை செய்கிறான். அதை படமும் பிடிக்கிறான்.

போலீஸ் பிடிக்க வரும் போது, terminator படத்தில் அர்னாலட்  அறிமுகம் ஆகும் உடையில் சரண் அடைகிறார்.

விசாரிக்க வரும் வக்கீலிடம் அவர்களை கொல்ல ஆசை பட்டதுண்டு திட்டமிட்டதுண்டு என்று எல்லாம் சொல்கிறார்.  குற்றத்தை ஒப்புக் கொண்டாய் என்று வக்கீல் கிளம்பும் போது நான் கொன்றேன் என்று சொன்னால் தான் ஒப்புதல் என்று அவருக்கு படம் எல்லாம் சொல்லி விட்டு எனக்கு ஜெயிலில் தூங்க நல்ல மெத்தை கொடுத்தால் ஒப்புக் கொள்வேன் என்று டீல் போடுகிறார்.

டீலுக்கு ஒப்புக் கொல்லாத வக்கீல் இவரை கோர்ட்டில் ஆஜர் செய்யும் போது தானே வாதாடி பெயில் வழங்கவிருக்கும் சமயம் ஜட்ஜை கடுப்பேற்றி மீண்டும் ஜெயிலுக்குப் போகிறார். [இந்த ஜட்ஜ் தான் பழைய வழக்கிலும் ஜட்ஜ் என்று எல்லாம் தெளிவாக சொல்லாமல் புரிந்துக் கொள்ள வேண்டும்]

இடையில் முன்பு, கொலை செய்ததை படம் பிடித்ததை வக்கீல் வீட்டுக்கு அனுப்ப அது தான் அரங்கேற்ற வீடியோ என நினைத்து அவரின் குழந்தை பார்த்து விடுகிறது.

மெத்தை எல்லாம் தர முடியாது என வீராப்பு காட்டிய  வக்கீல் இதை கேள்வி பட்டவுடன் கொடுத்து தொலைக்கிறார்.

அடுத்த நாள் குற்றத்தை ஒப்புக் கொண்ட அப்பா நல்ல சாப்பாடு வேண்டும் என்று எல்லாம் கேட்கிறார். டீல் போட்டு நான் உனக்கு எதாவுது கொடுக்க நீயும் எதாவது கொடுக்க வேண்டும். உன்னிடம் கொடுக்க எதுவும் இல்லை என கிளம்பும் போது "ஒரு பெயர் சொல்லி அவன் உயிர் இருக்கிறது என்னிடம் கொடுக்க என்று சொல்கிறான்"

அந்தப்  பெயர் பத்து வருடங்களுக்கு முன்பாக நடந்த வழக்கில் எதிர் தரப்பு வக்கீல். அவர் மூன்று நாட்களாக  காணவில்லை என்று தெரிய வரும் போது அப்பாவுக்கு நல்ல சாப்பாடு என்று ஒப்புக்கொள்கிறார்கள்
 மெனு சொல்லி விட்டு சரியாக ஒரு மணிக்கு சாப்பாடு வர வேண்டும் என சொல்கிறான். சாப்பாடு சரியான நேரத்துக்கு வராத போதும் சாப்பிடுவதற்கு ஸ்பூன் வங்கிக் கொண்டு, காணாமல் போனவனை ஒளித்து வைத்திருக்கும் இடத்தை சொல்கிறான்.  

ஒளித்து வைத்த இடத்திற்கு 15  நிமிடத்தில் போய் சேர்ந்தால் எதிர் காட்சி வக்கீல் ஆக்சிஜன் உதவியோடு உயிரோடு புதைக்கபட்டிருப்பார். அந்த ஆக்சிஜன் சப்ளை சரியாக 1: 15 க்கு நிறுத்தப்பட்டிருக்கும்.  சரியான நேரத்திற்கு சாப்பாடு போயிருந்தால் ஒரு உயிரை காப்பாற்றி இருக்கலாம் என்று புலம்பிக் கொண்டிருக்கும் போது, கைது செய்யப்பட்ட அப்பா உடன் இருந்த கைதியை கொன்று விட்டார் என்றும் தனிமை சிறையில் அடைக்க பட்டு விட்டார் என்று செய்தி வரும்.

தனிமைச் சிறையில் இருக்கும் போது சந்திக்க வரும் வக்கீலிடம் இது ஆரம்பம் தான் இனி மேல் தான் ஆட்டம் ஆரம்பம் என்றும் இதில் சம்பந்த பட்டவர்கள் அனைவரையும்
கொல்வேன் என்றும் சொல்கிறார். தன் வழக்கில் நீதி கிடைக்க வில்லை என்றும் அதற்கு பாடம் கற்பிக்கவே இதை எல்லாம் செய்வதாக சொல்கிறார்.

 அடுத்த நாள் ஆறு மணிக்கு தன்னை எல்லா வழக்கையும் தள்ளு படி செய்து விடுவிக்க வேண்டும் என்றும் அப்பா  டீல் போடுகிறார்.இல்லை என்றால் விளைவுகள் மிக மோசமாக இருக்கும் என்றும் மிரட்டுகிறார்.

இவன் யார் இவன் பின்புலம் என்ன என்று அப்பாவை பற்றி விசாரிக்கும்  போது அவர் வல்லவர் அசகாய சூரர்,  நினைத்ததை நடத்தியே முடிப்பவன் என்று எல்லாம் ஒருவர் கதை சொல்கிறார்.  அவன் சிறையில் இருப்பதே அவன் சிறையில் இருக்க வேண்டும் என திட்டம் போட்டதால் தான் இருக்கும் என்று எல்லாம் சொல்கிறார்.

அப்பா ஊர் முழுக்க ஒதுக்கு புறமான இடத்தில் இடம் வாங்கி இருப்பதும் தெரிய வருகிறது. ஆனால் எதற்கு எங்கே எனத் தெரியாமல்  சிண்டை பிய்த்துக் கொள்கிறார்கள்.

இதற்கிடையில் ஆறு மணி கெடு முடிகிறது. நம் வக்கீலின் உடன் பணி செய்பவர்களின்   கார்கள் எல்லாம் வெடித்து சிதறுகிறது. இறந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தி விட்டு வரும் வழியில் மிலிடரி குண்டுத் தாக்குதல். எல்லாம் அப்பா ஜெயிலில் இருக்கும் போதே. உள்ளே இருப்பவனுக்கு யார் உதவுகிறார்கள் என்று ஒரு பக்கம் விசாரணை நடக்கிறது. அப்பொழுது அப்பா வாங்கிய இடம் எது எனக் கண்டுபிடிக்கிறார்கள். அதில் ஒரு இடம் ஜெயிலுக்கு பக்கத்தில். அப்பா சிறைக்கும் அந்த இடத்துக்கும் பூமிக்கு அடியில் லைட் எல்லாம் போட்டு வழி செய்து வைத்திருப்பார்.  

அது வழியே சென்று அவரின் செல்லை பார்த்தால் அப்பா இருக்க மாட்டார். ஜெயிலுக்கு பக்கத்தில் அப்பாவின்  இடத்தை சோதனை போடும் போது அந்த நகரின்  மேயர் அலுவலுக மேப் இருக்கும். மேயர் அலுவலகத்தில் பாம் இருக்கும்.

வழக்கம் போல் அதை செயல் இழக்க வைக்க முடியாது அனைவரையும் வெளியேற்றவும் முடியாது. வக்கீல் என்ன செய்தார்? அப்பா என்ன செய்தார்? யாருக்கு யார் எவ்வாறு பாடம் கற்பித்தார்கள் என்பது தான் கிளைமாக்ஸ்.

Law Abiding Citizen என்னும் இந்த படத்தை பார்த்த முடித்த  போது திரைக் கதையின்  ஓட்டை ஓடிசல்களோடு[அதை எல்லாம் சொன்னால் படம் பார்க்கும் சுவாரசியம் போய் விடும் ;) இவ்வளவு விலாவரியாக விமர்சனம் எழுதியுமா என்று நற நற என பல் உரசும் ஓசை காதில் படுகிறது ] எனக்கு ஏனோ "உன்னை போல் ஒருவன்" படமும் நினைவுக்கு வந்தது!


  

Tuesday, May 25, 2010

தசாவதாரம்-சிறு குறிப்பு

 தசாவதாரத்தை பெருந்திரையில் தான் பார்க்க வேண்டும் என்று முடிவு செய்து படத்தை எடுக்கும் முன்னர் கடைசி நாள் கடைசி காட்சியை, படத்தை முன்னரே பார்த்தவர்களை இழுத்துச் சென்று  பார்த்த பொழுது அப்பாடா எடுத்த முடிவின் படி  பார்த்தாகி விட்டது என்ற எண்ணத்தை தவிர வேறு எதுவும் மேலோங்கி நிற்கவில்லை.

குளிர்பதன பேருந்தில் தெளிவான தியேட்டர் பிரிண்டில் பாஸ்ட் பார்வர்ட் ஏதும் இன்றி பார்த்த பொழுது சில பல பூதாகர சிந்தனைகள்.

அசின் என்ற ஒரு நல்ல நடிகையை காவல்காரன் மூலம் மீண்டும் தமிழுக்கு கொண்டு வரும் எங்கள் தலைவர் விஜய் வாழ்க!

பின்னணி இசை ஆகட்டும் பாடல்கள் ஆகட்டும் எல்லாம் பிரமாதம் எனத் தோன்றியது.

இப்படி படத்தில் இருக்கும் மற்ற(மல்லிகா ஷெராவத்)  சமாச்சாரங்கள் எதுவும் கண்ணுக்குத் தெரியாமல் மனதில் நிற்காமல் அனைத்தையும் சுனாமி போல் விழுங்குவது கமல்!

கமல் ஒரு ரகசிய வைணவ ஆத்திகரோ என்ற சந்தேகப் பேய் மனதில் தலை விரித்து ஆடிக் கொண்டிருக்கிறது.

அவருக்கு இந்த படத்திற்கு சிறந்த நகைச்சுவைக்கு என விருது வழங்கியது மிகப் பொருத்தம்.

கமலின் நடிப்புக்கு நிகர் அவரே[ அமெரிக்க காட்பாதர் பார்த்து விட்டு பழைய நாயகன் பார்க்கும் போது, பழைய படங்களில் ரஜினியின் நடிப்பை பார்க்கும் போது என சில சமயங்களில் கமலுக்கு  வழங்கப்படும் பாராட்டு அதிகமோ எனத் தோன்றியது உண்டு]

கமல் ஒரு சிறந்த வசனகர்த்தா. ஒவ்வொரு வார்த்தையையும் பார்த்து பார்த்து செதுக்கி இருக்கிறார். பின்னி இருக்கிறார். நக்கல் நையாண்டி எல்லாம் துள்ளி விளையாடுகின்றன.புத்திசாலித்தனம் மிளிர்கிறது. உதாரணத்திற்கு எதை விட எதை சொல்ல என்று யோசித்தால் படத்தின் வசனங்கள் அனைத்தையும் தான்  சொல்லவேண்டும்.

 தவறுகள் துருத்திக் கொண்டு தெரியாத திரைக்கதையும் கூட!

இவ்வாறு கொடுத்த காசுக்கு மேலாக பல சிறப்பம்சங்கள்    கூவுகின்றன.

ஜெயப்ரதாவை ஆட வைத்து நம்மை எல்லாம் கொடுமை படுத்தியதை கூட பொறுத்துக் கொள்ளலாம். [ஹேமமாலினி ஆடி இருந்தால் ஒரு வேலை கொண்டாடி இருக்கலாம்] ஆனால் தேவை இல்லாவிட்டாலும் திரைக்கதையை டிங்கரிங் பார்த்து பத்து வேடங்களில் நடித்து என் நடிப்புத் திறமையை நிரூபிப்பேன்,
 "கேயாஸ் தியரியை பாமரனுக்கு விளக்கி என் புத்திசாலிதனத்தை காட்டுவேன்  என கங்கணம் கட்டி இறங்கி, மேலும் சிறப்பாக விறுவிறுப்பாக இருந்திருக்க வேண்டிய  படத்தைத்  தராமல் இரசிகனை முட்டாளாக்கியதை பொறுத்துக் கொள்ள முடியவில்லை!

Saturday, May 01, 2010

Suraa

முன்னெச்சரிக்கை:
வில்லு, குருவி, வேட்டைக்காரன் எல்லாம் எதிர்பார்த்து சென்றால் பெருத்த ஏமாற்றம் தான் மிஞ்சும். நம் எதிர்பார்ப்புகளை எல்லாம் சுமாராகத் தான் பூர்த்தி செய்கிறது.

கதை: வழக்கம் போல ஒன்றும் பெரிதாக இல்லை. கதாநாயகன் வாழும் யாழ் [கண்டிப்பாக இந்த பெயர் தேவையா?]குப்பத்தை வில்லன் அபகரிக்க முற்படுகிறான். அதை முறியடித்து, அங்கு இருக்கும் அனைவருக்கும் நல்ல வீடு கட்டிக் கொடுத்து விட்டு கல்யாணம் செய்து கொள்கிறார்.  கிளைமாக்சில் ஏன் கல்யாணம் என்றால்  அங்கு இருக்கும் அனைவருக்கும் வீடு கட்டி கொடுத்து விட்டு தான் நான் கல்யாணம் செய்து கொள்வேன் என்பது அவர் முடிவு.

விஜயின் அறிமுக காட்சியை விட வடிவேலுவின் அறிமுக காட்சிக்கு அதிக விசில் கைதட்டல். [என்னிடம் இருந்த எக்ஸ்ட்ரா டிக்கெட்டை வாங்கியவர் வடிவேலுக்காகத்  தான் வந்ததாக சொன்னார்.] படத்தின் முன் பாதியில் பெரும் பகுதியும் பின் பாதியில் கொஞ்சமும் வடிவேல் தான் தாங்குகிறார். [சில பழைய காமெடிகளை தவிர்த்திருக்கலாம்]

விஜய் படத்தின் இந்த கதைக்கு இப்படி ஒரு திரைக்கதையே போதும், அதிகம் மெனக்கெட வேண்டாம் என  நினைத்திருப்பார் போல. சில பல பொத்தல்கள். முக்கியமான தருணங்களில் காணாமல் போகும் வடிவேல் ஒரு உதாரணம்.

புது வில்லன். நன்றாகவே செய்திருக்கிறார். எல்லாரையும் அசால்டாக போடுகிறார். வழக்கம் போல விஜயை மட்டும் விட்டு வைக்கிறார்.

இரண்டு தடவை விஜயை பார்த்தவுடன் தமன்னா காதலில் விழுகிறார். இரண்டு தடவை பார்த்தவுடன் காதலா என்று எல்லாம் நாம் கேட்க வேண்டாம். விஜய்யே கேட்டு விடுகிறார். படத்தில் ஒரு இடத்தில் தமன்னா எங்க அப்பா நம்ம காதலுக்கு ஒன்னும் சொல்ல மாட்டார், ஏன்னா அவர் ஒரு டம்மி பீசு என்று சொல்வார், இந்த படத்தில் அவரே டம்மி பீசு தான் என்பது அவருக்கு தெரியுமா?  பாடல் காட்சிகளிலும் அவரைக் காண சகிக்கவில்லை. விஜயின் படங்களில் நன்றாக இருக்கும் கதாநாயகிகள்  கூட  கோரமாகத் தோன்றுவது ஏன் என எனக்கு பிடிபட வில்லை. [முன்பு அனுஷ், இப்பொழுது  தம்மு]  தம்முவுக்கு தம்ஸ் டௌன்! :(

விஜய் சற்றே வெயிட் போட்டு இருப்பது போலத் தோன்றியது.சம்பந்தம் இல்லாமல் வரும் பாடல் காட்சிகளில் டான்சில் பின்னியிருக்கிறார்.சில இடங்களில் நன்றாக காமெடியும் செய்கிறார்.[இதில் ஏதும் நான் காமெடி செய்யவில்லை] கருத்து கந்தசாமி போல கருத்துகள் சொல்லிக் கொல்கிறார். வழக்கம் போல அங்கும் இங்கும் தாவுகிறார். பறக்கிறார்.போலீஸ் வேஷம்,மிலிடரி வேஷம் எல்லாம் போட்டாச்சு, இதில் வித்தியாசமாக என்ன செய்வது என யோசித்து, சர்தார்ஜி கப்பல் அதிகாரி வேஷம் எல்லாம் போடுகிறார். [சர்தார்ஜிகளுக்கு எல்லாம் போராட யாரும் இல்லையா என்ன?] சுனாமி வருது சூறாவளி வருது ரெண்டும் சேர்ந்து வருது என்று எல்லாம் வசனம் கேட்கும் போது சிரிப்பு வருது. அவன் பார்த்தா கடற்கரையே பத்தி எரியும் என்று புகழ் நெடியும் பிரசார நெடியும் அடிக்கும் போது நமக்கு எரிச்சல் பற்றி எரிகிறது.

சுருக்கமாக சொல்ல வேண்டுமென்றால் சுறா சுமார் தான்!

Monday, April 26, 2010

Inglourious_Basterds

The entire family is killed by a villain. As it goes in movies, (un)fortunately one alone survives to live(or die) another day. The grown up survivor falls in love with the person who is associated with the villain gang that killed the entire family. As luck would have it, there are some other interested parties who would love to kill the villain gang and they end up helping the hero even with out their knowledge.The revenge rules over the love. The person plots to kill the villain gang and succeeds. The shrewd villain gets what he deserves!
Sounds like a typical kollywod/bollywood story, huh! The treatment of the story with few twists and turns here and there in a second world war setting, throw in famous characters like Hitler, Goebbels,a Jew Hunter and a Nazi Hunter, strong screenplay, a vivid portrayal of characters and a solid performance by actors along with that Tarantino touch makes it an awesome believable movie.

I think the reason it did not win manys Oscars because the jury thought it was competing in Best Foreign Language Film!

P.S
I loved this movie and I am a very big fan of Quentin Tarantino, Hence no thrashing .
For an unbiased view and to know more.
This movie is definitely not meant for kids and grown up kids who dont have stomach for gruesomeness.

Monday, April 19, 2010

An Announcement

Dear Mom, Dad and Sis,

Respected, Current, Present and Past Managers,

Beloved Colleagues, near and dear friends, well wishers and unwell wishers,

Right from now, you could shout at me, swear with obsceneties, scold me like anything. I give you complete liberty on it. I would hear each and every word of it and will hang to them like I will hang on to my last breath.  I promise you.

My ears and heart can withstand all of them. I have become thick skinned i.e thick earred.

Yeah, I did hear all songs of suraa, when i can listen to it, why not your shoutings, swearings and scoldings?

எவ்வளவோ கேட்டுட்டோம், இதைக் கேட்க மாட்டோமா?

Monday, April 05, 2010

Paiya Punched

Who may love the movie/can watch the movie?
All guys who are the fans of Tamannah
All girls who are the fans of Karthi
All people who love car races.
All people who dont mind wasting 150 minutes.

What is the story?
Well, seems the producer who poured the money dint bother about it, the actors dint bother about it. Why the heck you and I should bother about it.

Few Good Words
In few places, dialogues and screenplay was good. Cinematography,art and songs was good.Songs were a visual treat. ;)

Verdict
Neither a movie that "You should not miss", nor a movie that "You should miss"

Note to
Milind Soman
You could still give lots of heroes a run for the moolah. Please no more villain roles, where you are wasted.
Jagan
We expect more from you. (நாங்க உங்க கிட்ட இருந்து இன்னும் எதிர்பார்கிறோம்)
Vishal and other action heroes
Beware, there is competition for you folks![ well, not only just in terms of action ;)]
Tamannah
You do have the "POTENTIAL" to fill in the shoes of simran.[or should i say belt!] you gotta long way to go in dance department.
To me
Not necessary to buy but should start learning to drive a four wheeler.
To Readers/Commentators
All comments related to the previous line or on my driving skills(or lack of it) will not be entertained, but deleted.

Saturday, March 27, 2010

The Devil Wears Prada

Not sure why i wanted to watch this movie!

Is it because he was drooling over anne hathway[:P :D] or or just to kill the boredom of my insomniac nights!

Well, First things first. Anne did not appeal to me! More over i liked the smart, Fat Anne who wears hideous skirts than the one who comes in the later part.

Loved the part where Meryl gives a history lecture on the sweater Anne wears! [if you had read the above line, you will know why i loved these :)]

Of all the characters in the movie, the one which admired the most was Meryl Streep.[What a lady sir she is ;)]

As soon as you see a guy doing favors and flirting with the heroine, when she has a steady boy friend, you can guess they will end up in bed!

This movie also reinforced my thoughts, why i really prefer watching english movies. They really do think a lot or spend efforts on a thing called "SCREEN PLAY" and give their best shot to make the story more realistic and give a try to tie the loose ends. Above all the climax, usually has a twist, a poetical touch if i may say and keeps you hooked until the last second.

Deepdown if i think, why i really liked the movie is cause, it is the story of most of our lives.

You get in to a job knowing least about it.  Keep thinking that it is a pit stop and temporary thing that will be a ticket to pursue your passions. Keep cribbing about the job and everything. You get englightened during a tea break from your senior colleague that ,If you cant work in what you love, Love the work you do" "Prove that you are good at what you are doing before you ask, this is what i want to do"  You start drinking the Kool Aid,  start worshipping the holycows,you blasphemed; you join the bandwagon and become one among them or even worst among them. All this happens while you forget you (did) are doing all this because, you were not able to beat them and can never accept the reality "they got you too" and you did sell your soul to devil.

And in the end, you think, "I had no choice and I am doing what everybody wanted to do!"

We just lack the courage and conviction to walk away from the hell we rot!

Sunday, March 14, 2010

Buzz Fizz

Right now, we all know that Buzz did not create, quite a buzz but was a fizz. Nobody would have even given a damn to this, if it was not creating the privacy havoc!

Why did Buzz fail??

It is just against the laws of nature!

In their book, "Origin of Brands", Ries and Ries, state and argue that, "Convergence is Crap", Divergence is Divine. They go on to give examples and prove the above mentioned statement.The book compares the origin of brands and origin of species and gives recipe to successful brands.

Now compare this with the so called social media!!Twitter is for tweets, Blogger is for Blogs. Picassa is to share pictures. Gmail is to send mails. Gtalk is for chat.

You dont mail all people who are in your network in a networking site.You dont chat with all the people to whom you send mail.

Nowadays you have your blog friends, tweet friends, chat friends, mail friends and orkut/facebook friends.
 
Definitely you dont want to bring all this together. In fact it would be better if they are all kept apart.[and you would want it that way]
 
And when you try to bring any of these together, all you get is a mess like buzz or a wave that dont reach the shores!
 
So even for social media, the origin of species do apply! and even here "Convergence is Crap" "Divergence is Divine"
 
p.s
After reading this post, if you feel, "something is missing in this post" "there is quite something wrong that i cant lay my finger on" voila I(Ries and Ries) have proved my(their) point.
This is what happens to a reader when an author tries to converge a book review and product review.

ஒரே ஒரு ஊரிலே ஒரே ஒரு ராஜா

பாப்பம்பட்டி  கிராமத்தில் இருப்பவர்களுக்கு உசிலம்பட்டி  கிராமத்தின் ஒரு குறிப்பிட்ட பொருளின் ஆசை. ஆனால் பாப்பம்பட்டி கிராமத்து மக்கள் அதை யாருக்கும் தருவதாக இல்லை. உசிலம்பட்டி மக்கள், பாப்பம்பட்டியில் வேவு பாக்க குழுவாக செல்லும் போது ,ஒருவன் அங்கே மாட்டிக்கொள்கிறான். அவனை கொல்ல முற்படுகிறாள் ஒருத்தி. [அந்த ஒருவன் தான் கதாநாயகன். அந்த ஒருத்தி தான் கதாநாயகி]அப்பொழுது பாப்பம்பட்டி குல தெய்வம் அவள் மனதில் தோன்றி அதை தடுத்து விடுகிறது. தெய்வ சங்கல்பம் என்பதால் அவனை அவர்கள் தலைவனிடம்[ஊர் தலைவர் தான் அந்த பெண்ணின் தந்தையும் ஆவார்] அழைத்து செல்கிறாள். ஊர் பஞ்சயாத்து அவளை திட்டுகிறது. அவர்கள் ஊர் பூசாரி அவர் ஆசிர்வதிக்க பட்டவர் என்று குறி சொல்கிறார்.

உசிலம்பட்டிகாரனை பாப்பம்பட்டியின் பழக்க வழக்கங்கள் எல்லாம் சொல்லி தரும் பொறுப்பை [வேறு யாரிடம்] தான் பெண்ணிடம் கொடுக்கிறார் தலைவர்.
அப்படி அவன் கற்றுக் கொண்டு அந்த ஊர் காளையை அடக்கும் போது அந்த பெண்ணிற்கு வழக்கம் போல காதல் வருகிறது.
உசிலம்பட்டிகாரனுக்கும் உசிலம்பட்டு மக்கள் ஆசைபடுவது தப்பு. பாப்பம்பட்டு மக்கள் தான் நல்லவர்கள் என்று உணர்கிறான்.

இந்த சமயத்தில் இவன் வேவு பாக்க வந்தவன் என்ற உண்மை வெளிபடுகிறது.

சமாதானம் செய்ய முயன்று பேச்சு வார்த்தை தோல்வி அடைந்து உசிலம்பட்டிக்கும் பாப்பம்பட்டிக்கும் பயங்கர சண்டை வருகிறது.  உசிலம்பட்டிகாரன் பாப்பம்பட்டி மக்களுடன் சேர்ந்து சண்டை இடுகிறான். [வழக்கம் போல அவன் நண்பர்களும் அவனோடு]

இதில் பாப்பம்பட்டி தலைவர் கதாநாயகனின்  நண்பர்கள் அனைவரும் செத்து மடிகிறார்கள். பாப்பம்பட்டி உசிலம்பட்டியிடம் தோற்று விடும் போல் இருக்கும் சமயத்தில் பாப்பம்பட்டி குல தெய்வத்திடம் கதாநாயகன் வேண்டுகிறான் . கடைசியில் தெய்வம் உதவ , கதாநாயகனும் வில்லனும் சண்டை போட,வில்லனை கொன்றும் கதாநாயகன் உயிருக்கு போராட கதாநாயகி காப்பாற்றுகிறாள்.

பி.கு
இது அவதார் படத்தின் கதை என்றோ. பாப்பம்பட்டி தான் நாவி என்றோ. உசிலம்பட்டி தான் பூமி என்றோ உங்களுக்குத் தோன்றினால் அதற்கு நான் பொறுப்பல்ல.

பி.பி.கு
இந்த படத்திற்கு ஆஸ்கார் கிடைக்க வில்லை என்று ஆர்ப்பாட்டம் செய்பவர்களுக்கு, "போங்கப்பு புள்ளைங்களை படிக்க வைங்க"

Sunday, March 07, 2010

ஜக்குபாய்-விண்ணைத் தாண்டி வருவாயா!

ஜக்குபாய்

நான் பிரஞ்சு படங்களை பார்த்ததில்லை.ஆனால் ஜக்குபாய் பார்த்திருக்கிறேன்.ஆனால் பிரஞ்சு படங்கள் இப்படி இருக்கும் என சத்தியமாய் தோன்றவில்லை. நல்ல வேலை மஹா அவதார் பாபா புண்ணியத்தில் ரஜினி இதில் நடிக்கவில்லை. ஸ்ரேயாவிற்கு அம்மா ஸ்தானத்தில் நடிக்கும் அளவுக்கு கிரணுக்கு வயசுக்கு ஆகி விட்டதா என்ன? அல்ல எனக்கு வயசுக்கு விட்டதா?ஸ்ரேயாவும் அவரின் டப்பிங்கும் சகிக்கவில்லை.கவுண்டமணி இன்னமும் ஹீரோவுடன் படம் முழுக்க வருகிறார். சண்டை எல்லாம் கூட போடுகிறார். ஆனால் காமெடி தான் காணமல் போய் விட்டது.We expect more from you yaa!!

விண்ணைத் தாண்டி வருவாயா!

இன்னமும் படத்தின் தாக்கத்திலிருந்து வெளியே வரவில்லை. கௌதம் மேனனின் சிறந்த படம் அல்ல ஆனாலும் எனக்கு மிகவும் பிடித்த படம்.சிம்பு இந்த படத்தில் நடித்திருக்கிறார் என்று சொல்ல முடியாத அளவு மிக இயல்பாய் செய்து உள்ளார். எங்கே சிம்பு ரசிகன் ஆகி விடுவேனோ என்று பயமாய் இருக்கிறது. பாடல்கள் படமாக்கபட்ட விதத்தில் ஆறு வித்தியாசம் கூட தெரிவதில்லை. Mute செய்து பார்த்தால் எந்த பாடல் என்று சொல்வது மிக கடினம்.கதை,திரைக்கதை,கதாநாயகியின் கதாபாத்திரம் ஏன் வசனம் கூட உண்மைக்கு மிக அருகில் உள்ளது!

Wednesday, February 10, 2010

ஹாசினி பேசும்படம் விமர்சனம் பற்றிய விமர்சனம்

பொதுவாக டிவி நிகழ்ச்சிகளும் சரி, டிவியும் சரி அதிகம் பார்த்ததில்லை, பார்ப்பதுமில்லை, பார்க்க வாய்ப்பும் கிடைப்பதில்லை. Twitter-ல் LazyGeek  ஹாசினி பேசும்படத்தின்  ஆயிரத்தில் ஒருவனின் விமர்சன லிங்க்  கொடுத்திருந்தார். ஆயிரத்தில் ஒருவன் என்பதால் ஆவலுடன் முழுதும் பார்த்தேன்.

இல்லை, நிச்சயமாய் நான் படத்தை விமர்சனம் செய்ய போவது இல்லை.
போதும் போதும் என்று சொல்லுமளவு இணையத்தில் நம் மக்கள் இதை ஆராய்ந்து   விட்டனர்.ஏன்  என்று யோசித்தால் "பழுத்த மரம் தான் கல்லடி படும்" என்ற பழமொழி தான் நினைவுக்கு வருகிறது. [கொழுத்த நாயும் கல்லடி படும் என்பதும் எனக்குத் தெரியும்] ஆனால் இப்படி எல்லாம் படம் எடுக்கத் துணிந்த தயாரிப்பாளரின் தைரியத்திற்கு தலை வணங்குகிறேன்.

விகடனில் செல்வராகவன் எழுதிய "கனா காணும் காலங்கள்" படித்த காலத்திலிருந்தே  அவர் மேல் ஒரு அளவு கடந்த ஆச்சரியம் உண்டு.நிகழ்ச்சியில் அவர் பேட்டியைக் கண்ட பின் சினிமாவின் மீது அவருக்கு இருக்கும் மரியாதை, கற்றுக் கொள்ள வேண்டும் என்ற ஆர்வம், தன்னடக்கம், நல்ல படம் எடுக்க வேண்டும்,படம் பார்ப்பவன் தான் முக்கியம் வேறு யாரும் முக்கியமில்லை என்ற அவரின் சிந்தாந்தம் தான் அவரின் வெற்றிக்கு காரணம் என்று தோன்றியது.[யார் எந்த துறையில் வெற்றி பெறுவதற்கும் இவை தான் அடிப்படைக் காரணம் என்பதும் அடியேன் கருத்து]

சினிமாவின் பல்வேறு பரிமாணங்களை மிக அருகில் பல்வேறு பார்வைகளில் பார்க்கும் வாய்ப்பு இருந்தாலும் அது சுஹாசினிக்கு குறையாக இல்லாமல் நிறையாக இருப்பது நிகழ்ச்சிக்கு நல்ல விஷயம். [அதிக அறிவு ஆபத்தானது]

அட என்ன, வீட்டில் அவரும் மணியும் சினிமாவை பற்றி பேசாமலா இருப்பார்கள். இந்த படத்தில் இது சரியில்லை அது சரியில்லை அப்படி செய்து இருக்கலாம் இப்படி செய்து இருக்கலாம் என்று எல்லாம் வீட்டில் பேசி இருந்து அதன் தாக்கம் நிகழ்ச்சியில் பிரதிபலித்தால்  நிகழ்ச்சி நாசமாய் போய் விடும்.அதையும் தாண்டி சுஹாசினி  அவரின் தனித்துவத்தை தக்க வைத்துக் கொள்வதே ஒரு சவாலான விஷயம்.

பழகிய மனிதர்களைப் பற்றியும் நல்லதோ கேட்டதோ கருத்து சொல்வதும் கடினமான வேலை தான்.

Finely Balanced Insider view என்றால் மிகையாகாது. ஆனால் இந்த மாதிரி நிகழ்ச்சியின் நடுவே அவர் உபயோக படுத்தும் Hi -Fi ஆங்கில வார்த்தைகள் அவரை நம்மிடமிருந்து அன்னியபடுத்தி விடுகிறது!

Sunday, January 04, 2009

தாய்ச்சொல்லைத் தட்டா தனயன்

ரஜினி, "I Can talk english walk english" என பேசுவது போல நான் ஹிந்தி பேச வேண்டும் என்று நெடுங்காலமாக ஓரு பெண்ணிற்கு விருப்பம். வேறு யாருமில்லை, என் அம்மா தான். தமிழ், கன்னடம், தெலுங்கு, என மூன்று திராவிட மொழிகள், மற்றும் ஆங்கிலம் என மொத்தம் நான்கு மொழிகளில் எனக்கு பரிச்சயம் இருந்தாலும்,தேசிய மொழி ஹிந்தி தெரியாமல் இருப்பது அவர்களுக்கு மிகப் பெரும் கவலை, குறை! மலையாளம் கற்றால், என் திராவிட மொழிகளின் பரிச்சயம் முழுமை பெறும் என ஏன் என் அம்மாவிற்கு தோன்றவில்லை.(எனக்கு தோன்றியிருக்கிறது :) )

நன்றாக ஆங்கிலம் பேச விரும்பும் என் நண்பர்கள் யாவருக்கும் நான் கொடுக்கும் அறிவுரை, ஆங்கில படங்களை பாருங்கள்.

ஊருக்கெல்லாம் உபதெசிப்பதை நாம் பின்பற்றினால் என்னவென்ற எண்ணம் சற்றே லேட்டாக என் மனதில் உதித்தது

தியேட்டர் சென்று, நான் ஹிந்தி படம் பார்ப்பது சின்னதம்பியில் கவுண்டமணி படம் பார்ப்பது போலத் தான்.

திருட்டு டிவிடி வாங்குவதில் விருப்பமில்லை.(மோசமான பிரிண்ட்டும், மோசர்பேயரும் காரணம்)

நெட்டில் டவுன்லோடு செய்தாலும் கவுண்டமணி கதைதான். சப் டைட்டில்கள் இருப்பதில்லை. டவுன்லோடு செய்ய பொறுமையும் இருப்பதில்லை. கனெக்க்ஷன் நம்மூரில் இன்னும் ஆமை வேகம் தான். (3G எப்ப ராசா வரும்?)
(நெட்டில் தமிழிசை, ஆங்கில படம், புத்தகங்கள் டவுன்லோடு செய்(த)வது இதில் சேராது)

பிற்காலத்தில் டிவிடி கடை வைக்கும் எண்ணம் எதும் இல்லாததாலும், செகண்ட் ஹாண்ட் டிவிடி மார்க்கெட் இல்லாததாலும், மோசர்பேயர் பங்குகள் வாங்காத காரணத்தினாலும், Big Flix-ல் ஐக்கியமாகி விட்டென். Big Flix,அமெரிக்க net flix-ன் இந்திய பிரதி.

Big Flix சேர்ந்த பின்னும் ஹாலிவுட் மோகத்தை குறைத்து பாலிவுட் பக்கம் வர ஒரு வார காலம் பிடித்தது.

அப்படி எடுத்த முதல் படம் மதூர் பண்டார்க்கர் எடுத்த Page-3 (அவரின் முதல் படமா எனத் தெரியவில்லை)
நம்மூரில் ஊர்ப்பெயர் வைத்து சிலர் படம் எடுப்பார்கள்.சிலர் ஊரை மையமாக வைத்து படம் பண்ணுவார்கள். அது போல டைரக்டர் மதூர் பண்டார்க்கர் உண்மைக்கு மிக அருகில் படம் எடுப்பவர்.
Corporate,Chandni bar, fashion ஆகியவை இவர் எடுத்த மற்ற சில படங்கள்.

பேக்ஷன் துறை நிஜமாகவே, இவர் எடுத்த பேக்ஷன் படம் போலத்தான் இருக்கும் என பேக்ஷன் துறையில் வேலைப் பார்க்கும் நண்பன் ஒருவன் அதிர வைத்தான். Page Three Celebrity யாரையும் எனக்குத் தெரியாது

இனி தினமும் பேப்பரில் மூன்றாம் பக்கத்தை பார்க்கும் போது எல்லாம் இந்த படம் நினைவுக்கு வரும்.

அடுத்த முறை ஊருக்கு போகும் போது அம்மாவிற்கு காட்ட இந்த படத்தை எடுத்துச் செல்ல வேண்டும். போட்டுக் காட்டிய பின், பின்னுரையாகச் சொல்ல வேண்டும். "அம்மா, நீ பார்த்தது சத்தியமாக ஹிந்தி படம் தான், அரைகுறையாக டப் செய்யப்பட்ட படம் அல்ல தமிழ் நாட்டில் தான் தமிழ் தெரியாமல் பிழைக்க முடியும் என்றல்ல, பம்பாயிலும் ஹிந்தி தெரியாமல் பிழைக்கலாம் ஆங்கிலத்தை வைத்துக் கொண்டு. கவலைப்படாதே அம்மா!"

பி.கு
படம் பார்த்து விட்டு மல்லாக்க படுத்து, அகலக்கால் விரித்து, விட்டத்தை பார்த்த போது உதித்த சிந்தனைகள்
பாம்பே மும்பை ஆகிவிட்டது, பாலி வுட் ஏன் மாலி வுட் ஆகவில்லை?
மஹாராஷ்டிரத்தில் மராட்டியர்கள் மட்டும் இருக்க வேண்டும் என போராடும் ராஜ் தாக்கரே, மஹாராஷ்டிரத்தில் ஹிந்தி படம் எடுக்க கூடாது என ஏன் போராடுவதில்லை?

Monday, November 05, 2007

For a very long time recently, I am back to square one.Yeah,I have been reading nothing else than tamil fiction.One such novel that held my attention was Dollar Marumagal (daughter in law) by Sudha Murthy. None else than the wife of NRN, the co-founder of Infosys.

It was initially written in kannada in the name, "dollar sosai" not dosai, sosai which in kannada means daughter in law. It is also a text book in mysore university. It has also been translated in telugu, hindi and marathi. Even it has come has teleserial in Zee. Hope our Radhikaa doesn't comes as the heroine either in sun or kalaignar tv

Our hero is the ambitious younger son of a middle class family with an elder brother who leads a contented life.The story begins with, hero(technically speaking, he cant be called hero!!To know why keep reading) hearing a sweet voice in the train, get to meet the girl,sacrifices his berth to her due to a confusion in the ticket allotment by the clerk(which company wrote the software for the railway ticketing system?) ends up staying in the house of the girl,comes to know her life is filled with grief, the girl takes care of him during his arm fracture. Well, what else he falls in love with that girl. (Poor hero doesnt have guts like NRN, who proposed the sudha, the author herself)

In the mean while, he gets a job in TCS,(does the skipping, earns a lot more in dollars. Being a NRI,He gets married to a girl from a rich family during his vacation to india and takes her back to US.

If you havent guessed, the girl with who he has fallen in love will end up as wife to your elder brother, either you havent watched any of the balachander movies or you havent been reading this post with your fullest concentration.(You gotta concentrate in Reading comprhension section, if you are appearing to CAT this year)

Well, the story is not all about a guy who lost his lady love being ambitious and chasing dollars. It is not all about just another day in today's IT techie life,though it portrays it. It is all about the knowledge transfer(odyssey of meeting with long term people) that happens to a mother to be precise the mother in law during a short term visit of the with two daughter in laws, one at onsite(america) and the other at offshore(india).

She gets to interact with different types of NRI's hearing about their "ABCD's (American Born Confused Desi's) as well as the ground reality about her dollar daughter in law.she gets an insight about, People not interfering in other personal lives, man and woman sharing the domestic chores in an equal fashion, Festivals being postponed to week ends and racism.
At one instance in the novel, the mother in law travels alone in a less crowded bus. When she goes and sit near a old lady of her age, the old lady moves away and sits in another seat. The mother in law compares this to an incident where she sacrificed a seat to travel in a crowded corporate bus, when a sweeper woman sat near her. (what else could be an eye opener, even though it could be a land of opportunities irrespective of caste, it is a land with difference to color)

I wouldn't be surprised, if the novel is nothing else but a collection of the account of true stories several NRI's.

This is not something written in mind to act as detrimental effect to avoid the long term guys making a skip(pun intended). as well as to paint a bleak picture that migration and settling down at US is dangerous. It is not to emphazize,"east or west, home is best"

Still,I strongly feel that it is a must to be read by all the software guys, girls and their parents as well as non-software people.(Because everybody lives in illusion) hence a post in english about a tamil novel. (I remember seeing the same title even in english.)