Sunday, November 18, 2018

கவிஞ்சரும், கவிஞ்ஜாயினியும்!

என்னுடைய 89 அழகிய ராட்சசிகள் கவிதை நூலை வாசித்ததில் இருந்து, இப்பொழுது எல்லாம் ஏன் கவித்துவமான கவிதைகள் எழுதுவதில்லை என்று வாசகிகள் மடல் மேல் மடல் எழுதுகிறார்கள்.

வாசகிகளா என்றால், வாசகிகள் எல்லாம் இல்லை. ஓரே ஒரு வாசகி சகதர்மிணி மட்டும் தான்! கவிஞ்சர் என்று ஆன பின் இவ்வளவு கூட மிகைப் படுத்த கூடாதா என்ன?

இப்படி கேட்டுக் கொண்டும்,  இந்த 96 அந்தாதி பாடலையும் , ரசம் செய்து கொண்டிருந்த போது காதல் ரசம் சிந்தும் பாடல்களை உங்கள்குழாயில் (YouTube)  (தமிழ் கவிஞ்சர்ரின் தமிழ் படுத்தல், சொல்ப அட்ஜ்ஸ்ட் மாடி)  கேட்டதன் விளைவாக நீ(ங்க) என்னடா (ங்க) எழுதுவது? நானே கவிஞ்ஜாயினி ஆகிவிடுகிறேன் என்று அவர் (கொஞ்சம் நானும்) எழுதிய குபீர்(பீர் எல்லாம் இல்லை)  கவிஜ , இதோ உங்கள் பார்வைக்காக!

(எச்சரிக்கை: கஜா புயல் காரணமாக வானம் மப்பும் மந்தாரமுமாக இருந்த சமயத்தில் புனையப்பட்டது)

(அகரம் இப்போ சிகரம் ஆச்சு, தகரம் இப்போ தங்கம் ஆச்சு மெட்டில் நீங்களே படித்து பாடிக் கொள்ள((ல்ல)வும்) ) (இங்கே லவ்வும் என்று படித்தவர்கள்

இட்லி எப்போ தோசையாகும்?
பூரி எப்போ சப்பாத்தியாகும்?

போர்வை எப்போ மெத்தையாகும்?
பாய் எப்போ சோபா ஆகும்?

தோசை எப்போ இட்லியாகும்?
சப்பாத்தி எப்போ பூரியாகும்?

மெத்தை எப்போ போர்வை ஆகும்?
சோபா எப்போ பாய் ஆகும்?

பால் எப்போ தயிர் ஆகும் ?
தயிர் எப்போ மோர் ஆகும்?

தயிர் எப்போ பால் ஆகும்?
மோர் எப்போ தயிர் ஆகும்?

அப்படி எல்லாம் ஆகாதுடா வெண்ணெய் என்று திட்டியவுடன் கவிஜ அரங்கேற்றும் படலம்  சண்டையுடன் முடிந்தது!



Friday, June 01, 2018

Note to myself for now and future.



  • More you wish strongly for things, the universe conspires to make it happen. Just wish for it very strongly
  • Have strong faith that all things happen for a reason, for a very good reason and in the long run all things will turn out well and good
  • Be humble and be patient. Sometimes, it is easy not to be respectful to others or lose cool, However it is never a good thing
  • Be yourself and who your self should be defined by who you are rather than the circumstances
  • Professional and Personal growth and development is all about, making a positive difference and creating an impact to the people around you
I firmly do believe in the above things and most of time, I do my best to live accordingly. However, there are times, I stray away from the principles. Hence the note as a self-reminder for now and future. 

Saturday, March 24, 2018

இந்த நாடும் நாட்டு மக்களும்...

கதை 1:
ஒரு ஊர்ல ஒரு பிச்சைக்காரன் ஒரு வீட்டு முன்னாடி பிச்சை கேட்டானாம்.
மருமக,  சாப்பாடு எல்லாம் இல்ல, போயிட்டு வா அப்படின்னாளாம். கேட்டுகிட்டிருந்த மாமியார்,  மறுபடி பிச்சக்காரன கூப்பிட்டு, என்ன சொன்னா அப்படின்னு கேட்டாளாம். சாப்பாடு இல்ல அப்படின்னு சொல்றாங்க அம்மா அப்படின்னானாம்.

மாமியாருக்கு வந்ததே கோவம். அவ யார் சொல்றதுக்கு,  நான் சொல்றேன் சாப்பாடு இல்ல போ அப்படின்னாளாம்.

கதை 2:
ஊர்ல ஒரு பழமொழி சொல்வாங்க, மாமியார் உடைச்சா மண்குடம், மருமக உடைச்சா பொன்குடம் அப்படின்னு

கதை 3:
தமிழ் சினிமால பாத்த ஞாபகம்.  வில்லனோட வேலைக்காரனை யாரோ அடி பின்னிடுவாங்க.  கேள்விப்பட்ட வில்லன், என் வேலைக்காரனை நீ எப்படி அடிக்கலாம் அடிச்சா நான் தான் அடிப்பேன் அப்படின்னு சொல்லி செம்மமையா அடிப்பார்

சமீபத்திய நிகழ்வு 1:

தம்பி மார்க். இந்தியர்களின் தனிப்பட்ட விவரங்களை எல்லாம் நீங்கள் சொந்தம் கொண்டாட கூடாது. கன்னாபின்னாவென்று திருட கூடாது, அப்புறம் எங்களுக்கு பதில் சொல்ல வேண்டி இருக்கும். : மத்திய அமைச்சர் கடுமையான எச்சரிக்கை

சமீபத்திய நிகழ்வு 2:
இந்தியர்கள் பணம் இல்லாத ஏழையாக இருக்கலாம். ஆனால் அவர்கள் எல்லாம் டேட்டா பணக்காரர்கள். அவர்களின் டேட்டாவை எல்லாம் விற்று இந்திய ஏழைகள் அவர்கள் வாழ்வாதரத்தை மேம்படுத்திக் கொள்ளலாம்- நந்தன்

சமீபத்திய நிகழ்வு 3:
பிரதமரின் செயலி, பயனாளர்களின் தனிப்பட்ட விவரங்களை அவர்களின் அனுமதியின்றி மற்ற நிறுவனங்களுக்கு வாரி வழங்கிக் கொண்டிருக்கிறது

சமீபத்திய நிகழ்வு 4:
இந்தியர்களின் தனிப்பட்ட விவரங்களை எல்லாம் வைத்து நீங்கள் என்ன செய்தீர்கள் என்று எங்களுக்கு சொல்ல வேண்டும் - மத்திய அமைச்சகம்!

சமீபத்திய நிகழ்வு 5
ஆதார் வழியாக யார் வேண்டுமானாலும் இந்தியர்களின் தனிப்பட்ட விவரங்களை அறிந்துக் கொள்ளலாம் - அமெரிக்க பத்திரிக்கை செய்தி

பின்குறிப்பு:

இந்த நிகழ்வுகளுக்கும் மேலே சொன்ன கதைகளுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. இந்தியர்களின் தனிப்பட்ட விவரங்களை விற்பது, துஷ்பிரயோகம் செய்வதற்கு எல்லாம் இந்தியர்களான எங்களுக்கு தான் ஏகபோக உரிமை. மற்றவர்களுக்கு எல்லாம் இல்லை என்று வாசகர்கள் புரிந்துக் கொண்டால் அதற்கு கம்பேனி பொறுப்பல்ல பொறுப்பல்ல

Friday, January 12, 2018

Respect thy shareholder

Somewhere in Universe!

We are already in fourth quarter. Our results don't seem that promising. Our stock price may not reach the target and we may not able to award the dividends that we want for ourselves

Can't we ask our auditors to manage this for us?

Well, they have been banned to audit publicly listed companies. 

What, how did they ban them without asking us? Aren't we running the country?

We have to keep up the appearances, we will fix it in appeal but it would take some time.

Ah, what can we do? 

Can we announce we are doing something in block chain and crypto currency?

Are we a stalled startup to pivot in to them? 


What, they are still alive? I thought they were dead and bankrupt!

No, No!

Ah, If their price can triple, it should help us too! By the way, do we even know what it is? What if it fails or goes no where?

Don't worry, we will tell our new young boss will lead this initiative. It will show our next generation is innovative and is poised to lead us for generations to come!