Friday, April 13, 2007

இரகசிய சினேகிதிக்காக

பிடித்திருக்கிறதா என கேட்டேன்
பிடிக்கவில்லை என சொன்னாள்

பொய் சொல்கிறாய் என்றேன்
பதிலை சொன்னேன் என்றாள்

பாசாங்குக்கு காரணம் கேட்டேன்
பாஷைகள் நமக்கு வேறுவேறு

பாதையும் நமக்கு வேறுவேறு
பதிலை பகன்றால் இவ்வாறு

பிரிந்து சென்றோம் இவையனைத்தையும்
பார்வையில் மட்டுமே பேசிவிட்டு

No comments: