Tuesday, June 23, 2009

சொல்லுவது நிஜம்!

பெண் பார்க்கும் படலம்.

பெரியவர்கள் பேச வேண்டியதெல்லாம் பேசிய பின், சிறிசுகள் சிறிது தனியாக பேச வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது.அதற்கென்ன தாராளமாக பேசுங்கள் என்று அவர்கள் இருவரும் தனித்து விடப்பட்டனர்.

"எனக்கு எதையும் மறைக்க விருப்பமில்லை. எல்லாவற்றையும் வெளிப்படையாக பேசுவது மிக முக்கியம் என்பது என் கொள்கை."

"எனக்கு புகைப் பிடிக்கும் பழக்கம் உண்டு, எப்பொழுதாவது கஞ்சா. சில சமயம் ஏன் பல சமயம் குடிக்கவும் செய்வேன். இது எல்லாம் உங்களுக்கு பிடிக்க வில்லையென்றால் கல்யாணத்திற்கு பிறகு கொஞ்சம் கொஞ்சம் கொஞ்சமாக மாற்றிக் கொள்கிறேன்."

மூர்ச்சையடைந்து விழுந்த சத்தம் கேட்டு அனைவரும் ஓடி வந்து கேட்டனர், "மாப்பிள்ளைக்கு என்ன ஆச்சு?"

No comments: